அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 2
கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்செய்கின் றாயே?
(திருவாய்மொழி 7.2.1)
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
'எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு?' என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?
(திருவாய்மொழி 7.2.1)
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திரு இந்தளூர்
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 9
நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)
நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
பாசுர எண்: 440
பெரியாழ்வார் திருமொழி
: 1
வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !
(பெரியாழ்வார் திருமொழி - 5-1-8)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
கோகுலம் (திருவாய்ப்பாடி)
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 8
வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி - 1.8.5)
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.