அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3224
முதல் திருவந்தாதி

குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு.
(முதல் திருவந்தாதி - 41)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
அமலனாதிபிரான்

naru naumpozhil malirumsolai nambikku-naan

nooru thadaavil vennai vaay nerndhu paravi vaithen

nooru thadaa niraindha akkara adisil sonnen

eru tiru udaiyan inru vandhivai kollungolo

To the lord of Malirumsolai surrounded by fragrant groves, I give my word to offer a hundred pots of butter today and a hundred pots of sweet morsel filled to the brim.Will the lord of growing affluence deign to accept them?

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3184
முதல் திருவந்தாதி

வையம் தகளியா வார் கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக -- செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3185
முதல் திருவந்தாதி

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று அது
அடைத்து, உடைத்து, கண்படுத்த ஆழி; இது நீ
படைத்து, இடந்து, உண்டு உமிழ்ந்த பார்.
(முதல் திருவந்தாதி - 2)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3186
முதல் திருவந்தாதி

பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே; சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான்; அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி.
(முதல் திருவந்தாதி - 3)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3187
முதல் திருவந்தாதி

நெறி வாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சாத்தி, அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரண்.
(முதல் திருவந்தாதி - 4)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3188
முதல் திருவந்தாதி

அரண் நாரணன் -- நாமம்; ஆன்விடை புள் -- ஊர்தி
உரை -- நூல் மறை; உறையும் கோயில் -- வரை, நீர்;
கருமம் -- அழிப்பு அளிப்பு; கையது -- வேல், நேமி;
உருவம் -- எரி, கார்மேனி, ஒன்று.
(முதல் திருவந்தாதி - 5)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3189
முதல் திருவந்தாதி

ஒன்றும் மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் -- அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திரு அரங்கம் மேயான் திசை.
(முதல் திருவந்தாதி - 6)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.