மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)

[பொருள்]

என் நெஞ்சமே ! உயிர்களிடத்தில் கருணையைப் பொழியும் அழகான, செவ்வரி ஓடிய கண்களை உடைய திருமால், அறத்துடன் கூடிய புண்ணிய காரியங்கள், அறத்திற்கு புறம்பான பாவ காரியங்கள் என்ற இரண்டு வகையான காரியங்களுக்கும் பலன் அளிப்பவன் ஆவான். அவனே இந்தப் புவியாகவும், அலைகடலாகவும், காற்றாகவும், வானாகவும், இவற்றைக் கடந்த விஷயமாகவும் உள்ளான். ஆகையால் நீ தவறாமல் அவனையே பற்றி, அவன் அருளையே எதிர்பார்த்து இருப்பாயாக.

(சொற்பொருள்)

(திறம்பாது) - தவற விடாது
(மறிகடல்) - அலைகள் துள்ளும் கடல் (மறிதல் - துள்ளுதல்)
(செங்கண்) - செம்மை + கண் [செம்மை - நேர்மை, தூய்மை, அழகு, சிவப்பு]
(மாருதம்) - காற்று
(கடைக்கண்) - அருள்; முடிவு

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.