திருவேங்கடம் மேய விளக்கே !

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே !
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் !
பாடா வருவேன் வினையாயின பாற்றே.
(பெரிய திருமொழி - 4.7.5)

 

[பொருள்]

வேடர்கள் மிகுதியாக இருக்கும் திருவேங்கடமலை மீது, தம்மை அண்டியவர்கள் உள்ளத்து இருள் நீக்கும் விளக்காக நிற்பவனே ! நாடு போற்றும் புகழ் பெற்ற வேதியர்கள் நிறைந்த திருநாங்கூரில், தளிர்கள் நிறைந்த, அழகு பொங்கும் மலர்ச் சோலைகளால் சூழப்பெற்ற திருவெள்ளக்குளத்தில் இருப்பவனே ! உன் குணங்களைப் பாடிக் கொண்டு வருவேன். எனது வினைகளை அழித்தருள வேண்டும். (திருவெள்ளக்குளம், திருநாங்கூர் பதினொரு திவ்யதேசங்களுள் ஒன்றாகும்.)

 

(சொற்பொருள்)

சேடு - அழகு; திரட்சி
ஆர் - நிறைந்த
பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.