​திருப்பல்லாண்டு - 3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடல் (மதுரை)

பாசுர எண்: 3
திருப்பல்லாண்டு

வாழாட்பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்*

கூழாட் பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*

ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை*

பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

(திருப்பல்லாண்டு - 3)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் *

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்*

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்* இலங்கை

பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

(திருப்பல்லாண்டு - 3)

vaazhaatpattu ninReer uLLeerael vandhu maNNum maNamum koNmin

koozhaatpattu ninReergaLai engaL kuzhuvinil pugudhal ottOm

yezhaatkaalum pazhippilOm naangaL iraakadhar vaazh ilangai

paazhaaLaaga padai porudhaanukku pallaandu koorudhume.

(Thiruppallaandu - 3)

You that stand and suffer life, come ! Accept talc past and fragrances. We shall not admit into our fold those who are slaves to the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon's haunt.

[பொருள்]

நாங்கள் ஏழு தலைமுறைகளாக, ஒரு விதமான குற்றமும் செய்யாதவர்களாக, பகவானுக்கு ஆட்பட்டு அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்பவர்களாக உள்ளோம். எங்கள் குழுவில் சேர வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே ! 'உணவிற்கு மட்டுமே ஆட்பட்டு இருப்போம்' என்று நிலையைக் கடந்தவர்களே ! முறையான, முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே, வாருங்கள் ! வந்து திருமண் (நாமம்) இட்டுக் கொள்ளுங்கள். திருமால் அணிந்த துளசி மாலையைச் சூடிக் கொள்ளுங்கள். இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கையை ஆண்ட இராவணனின் ஆட்சி பாழ் ஆகும் படி யுத்தம் செய்த ராமனுக்குப் 'பல்லாண்டு' பாடுவோம்.

(சொற்பொருள்)

கூழ் - உணவு; பொருள்

ஆட்படுதல் - அடிமை ஆதல்

ஆள் - ஆட்சி

பாழாளாக - பாழ் + ஆள் + ஆக

பாழாள் => ஆட்சி பாழ்படுதல்

இராக்கதர் - இராவணனன் முதலிய ராக்ஷஸர்கள்

படை - ஆயுதம்

பொருதல் - வீசுதல்; போர் புரிதல்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.