அனந்தபுர நகர் புகுதும் இன்றே

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருவனந்தபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கெடும் இடராய வெல்லாம் 'கேசவா !' என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே.

(திருவாய்மொழி - 10.2.1)

[பொருள்]

"கேசவா!" என்று கண்ணனை நாளும் அழைக்க, துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும். துன்பங்கள் தரும் எமனுடைய சேவகர்களும் அருகில் வரமாட்டார்கள்.

வண்டுகள் ரீங்காரமிடும் நீர்நிலைகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட அழகான திவ்யதேசம் திருவனந்தபுரம். அந்த திவ்யதேசத்தில் ஆதிசேடன் மேல் விரும்பி படுத்திருக்கும் கேசவனைக் காண இன்றே அவ்வூர் புகுவோம்.

(சொற்பொருள்)

இடர் - துன்பம்
விடம் - நஞ்சு (விஷம்)
விடம் உடை அரவம் - திருமால் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேடன்
தமர் - சேவகர்
பள்ளி - படுக்கை
தடம் - நீர்நிலை; கரை; வரம்பு
சுரும்பு அலற்றும் - வண்டுகள் ரீங்காரமிடும்

 

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.