தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தான்

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலிமண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.
(பெரிய திருமொழி - 6-8-1)

 

[பொருள்]

மான் தோலினை மார்பில் தரித்த குள்ள வடிவ பிரம்மசாரியாகச் சென்று மாபலி சக்கரவர்த்தியிடம் "மூன்று அடி நிலம் தா" என்று யாசித்து, மாபலி ஈந்த அளவிலே திரிவிக்கிரம அவதாரம் செய்து உலகங்களைத் தன் திருவடிகளால் அளந்த பெருமான்; தேன்கூடுகள் நிறைந்த மலையடிவாரத்தை உடைய திருவேங்கடத்தில் நின்ற பெருமான்; அவனை நான் நாடிச் சென்று திருநறையூரில் கண்டேனே.

 

(சொற்பொருள்)

சாரல் - மலையடிவாரம்; தாழ்வரை; சரிவான பக்கம்(மலைச்சாரல்)
தாள் - திருவடி
மாணி - குள்ள வடிவினன்; பிரம்மசாரி;அழகன்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.