அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக் கைகூப்பி என் கண்ணா ! கண்ணா ! என்ன

உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த

அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த

வில்லாளனை விட்டுசித்தன் விரித்த

சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்

வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அரவு அணையாய் ! ஆயர் ஏறே !

அம்மம் உண்ணத் துயிலெழாயே !

இரவும் உண்ணாது உறங்கி நீ போய்,

இன்றும் உச்சி கொண்டதாலோ ;

வரவுங் காணேன் ; வயிறு அசைந்தாய் ;

வன முலைகள் சோர்ந்து பாயத்

திரு உடைய வாய்மடுத்துத்

திளைத்து உதைத்துப் பருகிடாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்

வடி தயிரும் நறு வெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன்

எம்பிரான் நீ பிறந்த பின்னை;

எத்தனையும் செய்யப் பெற்றாய்;

ஏதும் செய்யேன், கதம் படாதே;

முத்து அனைய முறுவல் செய்து

மூக்கு உறிஞ்சி முலை உணாயே.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.