பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ !
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் !
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ?

(திருவாய்மொழி - 10.10.7)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

பெற்று இனிப் போக்குவனோ ? உன்னை, என் தனிப் பேருயிரை

உற்ற இருவினையாய் , உயிராய் பயன் ஆயவையாய்

முற்ற இம்மூவுலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ !
(திருவாய்மொழி - 10.10.8)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

முதல் தனி வித்தேயோ ! முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்?
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ! ஓ !
(திருவாய்மொழி - 10.10.9)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.
(திருவாய்மொழி - 10.10.10)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.