அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எருதுகளோடு பொருதி ,
ஏதும் உலோபாய் காண் , நம்பீ !
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் ;
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே !
புன்னைப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே !
மடம் கொள் மதிமுகத்தாரை
மால் செய்ய வல்ல என் மைந்தா !
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
இரு பிளவு ஆக முன் கீண்டாய் !
குடந்தைக் கிடந்த எம் கோவே !
குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,

கட்டி நன்கு உடுத்த பீதக ஆடைஅருங்கல உருவில் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது,மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீமாலிகள் அவனோடு

தோழமை கொள்ளவும் வல்லாய் !

சாமாறு அவனை நீ எண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்;
ஆமாறு அறியும் பிரானே !
அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் !
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.