அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 1
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடையவர்கள்;
அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே.
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 1
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்,
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்,
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்;
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 1
திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்,
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே.
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 1
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய், அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து, அமரர்க்கும் அறிவியந்து,
அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே.
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.